முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரியில் பிரதமரின் 'ஏழைகள் நலத்திட்ட விழா' கலந்துரையாடல்

அகில இந்திய அளவில் செவ்வாய்க்கிழமை 'ஏழைகள் நலத்திட்ட விழா' புதுச்சேரியில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

Updated On : 31 மே 2022, 12:16 pm IST
பகிர்:

புதுச்சேரி: அகில இந்திய அளவில் செவ்வாய்க்கிழமை 'ஏழைகள் நலத்திட்ட விழா' புதுச்சேரியில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

பிரதமர் மோடி காணொளி காட்சி மூலமாக, பயனாளிகளிடம், மத்திய அரசின் திட்டங்கள் குறித்து கேட்டரிய உள்ள நிலையில், புதுவை மாநிலத்தில் ஏழைகள் நலத்திட்ட விழா புதுச்சேரி கம்பன் கலையரங்கில் தொடங்கியது.

புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், முதல்வர் ரங்கசாமி, சட்டப் பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர்கள் லட்சுமிநாராயணன் நமச்சிவாயம், தேனி ஜெயக்குமார், எம்.பி. செல்வகணபதி , தலைமை செயலர் ராஜிவ்வர்மா, சட்டமன்ற உறுப்பினர்கள், பயனாளிகள், அதிகாரிகள்  மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளனர்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.