புதுச்சேரியில் பிரதமரின் 'ஏழைகள் நலத்திட்ட விழா' கலந்துரையாடல்
அகில இந்திய அளவில் செவ்வாய்க்கிழமை 'ஏழைகள் நலத்திட்ட விழா' புதுச்சேரியில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
புதுச்சேரி: அகில இந்திய அளவில் செவ்வாய்க்கிழமை 'ஏழைகள் நலத்திட்ட விழா' புதுச்சேரியில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
பிரதமர் மோடி காணொளி காட்சி மூலமாக, பயனாளிகளிடம், மத்திய அரசின் திட்டங்கள் குறித்து கேட்டரிய உள்ள நிலையில், புதுவை மாநிலத்தில் ஏழைகள் நலத்திட்ட விழா புதுச்சேரி கம்பன் கலையரங்கில் தொடங்கியது.
புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், முதல்வர் ரங்கசாமி, சட்டப் பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர்கள் லட்சுமிநாராயணன் நமச்சிவாயம், தேனி ஜெயக்குமார், எம்.பி. செல்வகணபதி , தலைமை செயலர் ராஜிவ்வர்மா, சட்டமன்ற உறுப்பினர்கள், பயனாளிகள், அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளனர்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.