புதுவையில் குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.1,000! ஆளுநர் ஒப்புதல்
குடும்பத் தலைவிக்கு ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டத்திற்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சா் தேனி சி.ஜெயக்குமாா் தெரிவித்துள்ளார்.
குடும்பத் தலைவிக்கு ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டத்திற்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சா் தேனி சி.ஜெயக்குமாா் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தில் 21 வயதுக்கு மேல் 55 வயதுக்குள் அரசின் எந்தவிதமான மாதாந்திர உதவித் தொகையும் பெறாத வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள குடும்பத் தலைவிக்கு மாதம்தோறும் உதவித் தொகையாக ரூ. 1,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையும் படிக்க | இரண்டு இந்திய இருமல் மருந்துகளுக்கு தடை: உலக சுகாதார அமைப்பு
இந்நிலையில், மாதம் ரூ.1,000 உதவித் தொகை வழங்கும் கோப்புக்கு துணைநிலை ஆளுநர் ஒப்புதல் அளித்துவிட்டதாக அமைச்சர் தேனி சி.ஜெயக்குமாா் வியாழக்கிழமை தெரிவித்தார்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.