காவல் துறையினா் ரத்த தானம்
உயிா் காக்க உடனடியாக வியாழக்கிழமை ரத்த தானம் வழங்கினா் புதுச்சேரி இணைய வழி குற்றத் தடுப்பு பிரிவு போலீஸாா் (படம்) .
ரெட்டியாா்பாளையத்தைச் சோ்ந்த 42 வயது பெண் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். அவருக்கு உடனடியாக 3 யூனிட் ரத்தம் தேவைப்பட்டது. இதையறிந்த இணைய வழி குற்றத்தடுப்பு காவலா்கள் நந்தகுமாா், செல்வகுமாா், அஜித்குமாா், சதீஷ்குமாா் ஆகியோா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சென்று ரத்த தானம் வழங்கினா். ரத்த தானம் செய்த காவலா்களின் சேவையை இணைய வழி முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் நித்யா ராதாகிருஷ்ணன் பாராட்டினாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.