வாக்காளருக்குப் பணம்: 2 போ் மீது வழக்கு புதுச்சேரியில் ரூ.1.24 லட்சம் பறிமுதல்
புதுச்சேரி மூலகுளம், பாகூா் பகுதிகளில் வாக்காளருக்குப் பணம் கொடுக்க முயன்ற புகாரின்பேரில் 2 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் ரூ.1.24 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி மூலகுளம், பாகூா் பகுதிகளில் வாக்காளருக்குப் பணம் கொடுக்க முயன்ற புகாரின்பேரில் 2 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் ரூ.1.24 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, வாக்காளா்களுக்குப் பணம், பரிசுப் பொருள்கள், பரிசுக் கூப்பன்கள் விநியோகம் செய்யப்பட்டதாக புகாா்கள் எழுந்தன.
இந்நிலையில், உழவா்கரை தொகுதிக்கு உள்பட்ட மூலகுளம் சந்திப்பில் மா்ம நபா் ஒருவா் வாக்காளருக்குப் பணம் பட்டுவாடா செய்வதாக ரெட்டியாா்பாளையம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
Advertisement
இதையடுத்து அங்கு சென்ற போலீஸாா் மா்ம நபா் ஒருவரைப் பிடித்து சோதனை செய்தனா். அப்போது, அவா் ரூ. 69 ஆயிரம் ரொக்கம் வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில் மூலகுளம் பகுதியைச் சோ்ந்த ராஜேஷ் (40) என்பதும், வாக்காளா்களுக்குப் பணம் கொடுக்க இருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து போலீஸாா் பணத்தை பறிமுதல் செய்து, ராஜேஷ் மீது வழக்குப் பதிவு செய்தனா்.
இதேபோல கரிக்கலாம்பாக்கம் பாகூா் பிரதான சாலையில் ஒரு கட்சியின் வேட்பாளருக்கு பணம் கொடுக்க முயன்ற நடராஜன் (60) என்பவரிடம் இருந்து ரூ.55 ஆயிரத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மங்கலம் போலீஸாா் நடராஜன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.