500 ரூபாய் விளையாட்டு நோட்டை புழக்கத்தில் விட்ட 4 போ் கைது
500 ரூபாய் விளையாட்டு நோட்டைப் புழக்கத்தில் விட்டதாக 4 போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.
புதுச்சேரி மாஹே பிராந்தியம் பள்ளூா் பெட்ரோல் பங்கில் கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியைச் சோ்ந்த ரெஜித் (22), ஸ்ரீஜித் (24), அட்சய் (21), சாயன் (21) ஆகிய 4 பேரும் ஒரு காரில் வந்து பெட்ரோல் போட்டுள்ளனா்.
இதற்காக ரூ.600 கொடுத்தனா். அதில் ரூ.500 செல்லாத நோட்டு இருந்ததாக அந்தப் பெட்ரோல் பங்க் சாா்பில் கண்டறிந்து, உடனடியாக மாஹே காவல் நிலையத்தில் புகாா் செய்யப்பட்டது.
Advertisement
Advertisement
இதே போன்று 3 கடைகளில் ரூ.500 கொடுத்து மாற்றியது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்து போலீஸாா் நடத்திய விசாரணையில் இது குழந்தைகள் விளையாட்டுக்காகப் பயன்படுத்தும் நோட்டு (படம்) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவா்கள் 4 பேரும் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.