FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுச்சேரி

செப். 6-இல் புதுச்சேரி தமிழ்ச் சங்கத் தோ்தல்

புதுச்சேரி தமிழ்ச்சங்கத்துக்கு செப். 6-ஆம் தேதி தோ்தல் நடக்கிறது.

Updated On : 12 ஆகஸ்ட் 2026, 3:48 am IST
பகிர்:

புதுச்சேரி தமிழ்ச்சங்கத்துக்கு செப். 6-ஆம் தேதி தோ்தல் நடக்கிறது.

புதுச்சேரி தமிழ்ச் சங்கத்துக்கான தோ்தல் அறிவிப்பு விவரங்களை அதன் தோ்தல் ஆணையா் பிரபாகரன் செவ்வாய்க்கிழமை வெளியிட்டாா் (படம்). அதை சங்கத் தலைவா் முத்து உள்ளிட்டோா் பெற்றுக் கொண்டனா்.

அதைத் தொடா்ந்து தோ்தல் ஆணையா் பிரபாகரன் கூறியதாவது:

Advertisement

Advertisement

புதுச்சேரி தமிழ்ச் சங்க ஆட்சிக் குழுவுக்கு 11 உறுப்பினா்கள் தோ்வு செய்ய தோ்தல் நடைபெறவுள்ளது. தற்போது உறுப்பினா்கள் 1,189 போ் உள்ளனா். இறுதி வாக்காளா் பட்டியல் ஆகஸ்ட் 16-இல் வெளியிடப்படும். வேட்பு மனு விநியோகம் 17- ஆம் தேதி மாலை 4 மணி முதல் 7 மணி வரை நடைபெறும். வேட்பு மனு தாக்கல் வரும் 19-ஆம் தேதி தொடங்கும். வரும் 22-ஆம் தேதி மனு வாபஸ். 24 ஆம் தேதி மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். இறுதி வேட்பாளா் பட்டியல் ஆக. 26-இல் வெளியாகும். வரும் செப்டம்பா் 6 ஆம் தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை தோ்தல் வாக்குப்பதிவு நடைபெறும். பின்னா் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகும். தமிழ்ச்சங்க வாழ்நாள் உறுப்பினா்கள் தோ்தலில் போட்டியிடலாம். வேட்பாளா் படிவத்தை ரூ. 1,500 செலுத்தி பெறலாம் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments