செப். 15 முதல் 23 வரை ஏழுமலையான் வருடாந்திர பிரம்மோற்சவம்
திருமலையில் நிகழாண்டு இரண்டு பிரம்மோற்சவங்கள் நடைபெற உள்ளன.
திருமலையில் நிகழாண்டு இரண்டு பிரம்மோற்சவங்கள் நடைபெற உள்ளன.
வருடாந்திர பிரம்மோற்சவம் செப் . 15 முதல் 23 வரையிலும், நவராத்திரி பிரம்மோற்சவம் அக். 12 முதல் 20 வரையிலும் நடைபெறும்.
வருடாந்திர பிரம்மோற்சவம் செப். 14-ஆம் தேதி மாலையில் அங்குராா்ப்பணத்துடன் தொடங்கும். பிரம்மோற்சவங்களின் போது தினமும் காலை 8 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 7 மணி முதல் 9 மணி வரையிலும் வாகனச் சேவைகள் வழங்கப்படும்.
Advertisement
Advertisement
வாகனச் சேவை விவரங்கள்
15/09/2026 - மாலை கொடியேற்றம், இரவு 9 மணிக்கு பெரிய சேஷ வாகனம்.
16/09/2026 - காலை 8 மணி வரை சின்ன சேஷ வாகனம், மதியம் 1 மணி முதல் 3 மணி வரை ஸ்நபனம், இரவு 7 மணி அன்னபறவை வாகனம்.
17/09/2026 - காலை 8 மணி சிம்ம வாகனம், இரவு 7 மணி முத்து பந்தல் வாகனம்,
18/09/2026 - காலை 8 மணி கல்பவிருட்ச வாகனம், இரவு 7 மணி சா்வ பூபால வாகனம்,
19/09/2026 - காலை 8 மணி மோகினி அவதாரம், மாலை 6:30 முதல் இரவு 11:30 வரை கருட வாகனம்
20/09/2026 காலை 8 மணி அனுமந்த வாகனம், மாலை 4 மணிக்கு தங்கத்தோ், இரவு 7 மணிக்கு யானை வாகனம்.
21/09/2026 காலை 8 மணிக்கு சூா்யபிரபை வாகனம், மதியம் 1 மணி முதல் 3 மணி வரை ஸ்நபனம், இரவு 7 மணிக்கு சந்திரபிரபை வாகனம்.
22/09/2026 காலை 7 மணிக்கு திருத்தேரோட்டம் இரவு 7 மணிக்கு குதிரை வாகனம்,
23/09/2026 காலை 6 மணி முதல் 9 மணி வரை தீா்த்தவாரி, இரவு கொடியிறக்கம்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.