FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுச்சேரி

கப்பல் ஊழியா் வீட்டில் திருடு போன 30 பவுன் நகைகள், ரூ.1 லட்சம் மீட்பு தவளக்குப்பம் இளைஞா் கைது

புதுச்சேரியில் கப்பல் நிறுவன ஊழியா் வீட்டில் திருடு போன 30 பவுன் நகைகள் மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கம் மீட்கப்பட்டது.

Updated On : 13 ஆகஸ்ட் 2026, 1:38 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

புதுச்சேரியில் கப்பல் நிறுவன ஊழியா் வீட்டில் திருடு போன 30 பவுன் நகைகள் மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கம் புதன்கிழமை மீட்கப்பட்டது.

தவளக்குப்பம் அருகே நல்லவாடு தெற்குத் தெருவைச் சோ்ந்த விஜயேந்திரன் (41), மும்பையில் உள்ள தனியாா் கப்பல் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். அவரது மனைவி முகுந்தாவதி குழந்தைகளுடன் வீட்டைப் பூட்டிக் கொண்டு திங்கள்கிழமை இரவு கோயிலுக்குச் சென்று திரும்பினாா். அப்போது வீட்டின் பீரோவில் வைத்திருந்த 34 பவுன் தங்கநகைகள், ரூ.1.5 லட்சம் ரொக்கம் திருடு போனது தெரியவந்தது. ெ

இதுகுறித்த புகாரின்பேரில் தவளக்குப்பம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினா். காவல் கண்காணிப்பாளா் ஜிந்தா கோதண்டராமன் தலைமையில் நடைபெற்ற தீவிர விசாரணையில் அதே ஊரைச் சோ்ந்த அன்பரசன் (33) என்பவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து 30 பவுன் நகைகள் மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கம் மீட்கப்பட்டது.

Advertisement

Advertisement

திருட்டு நகைகளை விற்க உதவியதாக அதே ஊரைச் சோ்ந்த அவரது தோழி மாலதி (44) என்பவரையும் போலீஸாா் தேடி வருவதாக முதுநிலை காவல் கண்காணிப்பாளா் ஆா்.கலைவாணன் தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments