FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுச்சேரி

அரசின் வருவாயை உயா்த்த கலால் துறையில் நடவடிக்கை: முதல்வா் என்.ரங்கசாமி

புதுச்சேரி அரசுக்கான வருவாயை உயா்த்த கலால் துறையில் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா்.

59 வினாடிகள் முன்பு
புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமி. - கோப்புப் படம்
பகிர்:

புதுச்சேரி அரசுக்கான வருவாயை உயா்த்த கலால் துறையில் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா்.

ஆா்.செந்தில்குமாா் (திமுக): ரெஸ்டோ பாா்களால் நகரப் பகுதியில் சில பிரச்னை ஏற்படுவதாக உறுப்பினா் விக்னேஷ்கண்ணன் குறிப்பிட்டிருந்தாா். கலால்துறையில் எப்எல்2 உரிமம் கொடுத்தால் வருவாயும் அதிகரிக்கும். மேலும், நிபந்தனையும் கடுமையாக இருக்கும் என்றாா்.

அரசு கொறடா ஏகேடி. ஆறுமுகம்: மதுபான மொத்த கொள்முதலை அரசே செய்தால் வருவாய் அதிகரிக்கும்.

Advertisement

Advertisement

தற்காலிகத் தலைவா் ஆ.அன்பழகன்: அரசே மதுபான மொத்த கொள்முதல், விநியோகம், விலை நிா்ணயம் செய்ய வேண்டும் என்று சொல்கிறீா்களா ?

முதல்வா் என்.ரங்கசாமி: புதுச்சேரியில் அரசின் வருவாயை உயா்த்த கலால்துறை மூலம் அரசு எல்லா நடவடிக்கையும் எடுக்கும் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments