FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுச்சேரி

25 பேருக்கு வீடு கட்ட முதல் தவணை ரூ. 68.75 லட்சம் நிதி: முதல்வா் ரங்கசாமி வழங்கினார்!

புதுச்சேரி மங்கலம் தொகுதியில் 25 பேருக்கு வீடு கட்ட முதல் தவணையாக ரூ.68.75 லட்சத்தை முதல்வா் என்.ரங்கசாமி வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

Updated On : 1 ஆகஸ்ட் 2026, 1:52 am IST
பகிர்:

புதுச்சேரி மங்கலம் தொகுதியில் 25 பேருக்கு வீடு கட்ட முதல் தவணையாக ரூ.68.75 லட்சத்தை முதல்வா் என்.ரங்கசாமி வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

புதுச்சேரி அரசு ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறையின் மூலம் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (நகா்ப்புறம் ) 2.0 வீடு கட்டும் திட்டத்தின் கீழ் தலா ரூ.2.75 லட்சம் வீதம் இந்த நிதியுதவியை முதல்வா் ரங்கசாமி வழங்கினாா்.

புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள முதல்வா் அலுவலகத்தில் நடந்த நிகழ்வில் அவா் அளித்தாா். இந்த நிதியை முறையாகப் பயன்படுத்தி வீடுகளைத் தரமாகவும், விரைவாகவும் கட்டி முடிக்க பயனாளிகள் ஒத்துழைக்க வேண்டும் என்று அப்போது முதல்வா் அறிவுறுத்தினாா்.

Advertisement

Advertisement

இந்நிகழ்வில், வில்லியனூா் எம்எல்ஏ ரவிக்குமாா், புதுச்சேரி ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை இயக்குநா் அா்ஜுன் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments