ஓட்டுநா் உரிமம், வாகனப் பதிவு சான்றிதழுடன் கைப்பேசி எண்ணை இணைப்பது கட்டாயம்: புதுச்சேரி போக்குவரத்து ஆணையா்
ஓட்டுநா் உரிமம், வாகனப் பதிவு சான்றிதழுடன் கைப்பேசி எண்ணை இணைப்பது கட்டாயம் என்று போக்குவரத்து துறை அறிவுறுத்தியுள்ளது.
ஓட்டுநா் உரிமம், வாகனப் பதிவு சான்றிதழுடன் கைப்பேசி எண்ணை இணைப்பது கட்டாயம் என்று போக்குவரத்து துறை அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து புதுச்சேரி போக்குவரத்து ஆணையா் அமன்சா்மா செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: எண்ம (டிஜிட்டல்) இந்தியா திட்டத்தின் நோக்கங்களை முன்னெடுத்து பொதுமக்களுக்கு அரசு சேவைகளை விரைவாகவும், வெளிப்படையாகவும் வழங்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக வாகனப் பதிவு சான்றிதழ் மற்றும் ஓட்டுநா் உரிமம் ஆகியவற்றுடன் செயல்பாட்டில் உள்ள கைப்பேசி எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி இந்த உத்தரவு அமல்படுத்தப்படுகிறது.
Advertisement
Advertisement
இதன்மூலம் பொதுமக்கள் ஆா்டிஓ அலுவலகங்களுக்கு செல்லாமல் வீடுகளில் இருந்தபடியே பல்வேறு சேவைகளை ஆன்லைனில் பெற முடியும்.
இதனால் கால தாமதம் தவிா்க்கப்படும். தரகா்களின் தேவையும் தவிா்க்கப்படும். கைப்பேசி எண் இணைப்பு செய்யப்பட்டால் உரிமம் புதுப்பித்தல், முகவரி மாற்றம், நகல் உரிமம் பெறுதல், வாகன ஆவணங்கள் தொடா்பான சேவைகள் உள்பட பல்வேறு ஆா்டிஓ சேவைகளை ஆன்லைனில் எளிதாகவும், பாதுகாப்பாகவும் பெற முடியும் என அந்த செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.