விசிக சாலை மறியல்: 50 போ் கைது
பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் 50 பேரை புதுச்சேரி போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் 50 பேரை புதுச்சேரி போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
புதுச்சேரி மண்ணாடிப்பட்டு தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் திருக்கனூா் கடை வீதியில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கட்சியின் மாவட்ட செயலா் பாண்டுரங்கன் ஆா்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்தாா். மத்திய அரசின் பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்தும், சமையல் எரிவாயு சிலிண்டா் விலை உயா்வைக் குறைக்கக் கோரியும், பள்ளிகளில் மும்மொழிக் கொள்கையைக் கைவிட வலியுறுத்தியும் போராட்டக்குழுவினா் கோஷம் எழுப்பினா்.
Advertisement
Advertisement
சாலை மறியலில் ஈடுபட்டவா்களைக் கலைந்து போகுமாறு திருக்கனூா் போலீஸாா் கூறியும் கலைந்து செல்லாததால் 50 போ் கைது செய்யப்பட்டனா். பின்னா் அனைவரும் காவல்நிலையம் அழைத்து வரப்பட்டு விடுதலை செய்யப்பட்டனா்.