புதுச்சேரியில் பள்ளிகள் திறக்கும் தேதி அறிவிப்பு!
புதுச்சேரியில் பள்ளிகள் திறக்கப்படுவது பற்றி..
தமிழ்நாட்டைத் தொடர்ந்து புதுச்சேரியில் ஜூன் 4ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
கோடை வெய்யிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், பள்ளிகள் திறக்கும் தேதியை புதுச்சேரி அரசு தள்ளிவைத்துள்ளது. ஜூன் 1 ஆம் தேதி திறக்கப்பட இருந்த பள்ளிகள் தற்போது ஜூன் 4 ஆம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மட்டுமல்லாது காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய நான்கு பிராந்தியங்களிலும் ஜூன் 4ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது.
Advertisement
Advertisement
கடந்த சில நாள்களாக வெப்பநிலை கடுமையாக அதிகரித்துள்ளதால், மாணவர்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது.
குறிப்பாகப் பகல் நேரங்களில் வெய்யிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருப்பதால் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படக்கூடும் என்பதால், கல்வித்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக்குப் பிறகு பள்ளிகள் திறப்பு தேதியை மாற்றியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அதேசமயம் கோடை வெப்பம் மேலும் நீடிக்கும்பட்சத்தில் அடுத்தடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்னதாக தமிழகத்திலும் பள்ளிகள் திறப்பு தேதி ஜூன் 4-க்கு தள்ளி வைக்கப்பட்டிருக்கும் நிலையில், புதுச்சேரியிலும் பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
Following Tamil Nadu, Puducherry Chief Minister Rangasamy has announced that schools in the Union Territory will reopen on June 4.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.