அரசுப் பள்ளி கட்டடம் திறப்பு
மயிலம் தொகுதி செ.கொத்தமங்கலம் அரசுப் உயர்நிலைப் பள்ளியின்புதிய கட்டடத் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
மயிலம் தொகுதி செ.கொத்தமங்கலம் அரசுப் உயர்நிலைப் பள்ளியின்புதிய கட்டடத் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
ரூ.1.62 கோடியில் கட்டப்பட்ட இந்த கட்டடத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இதனை தொடர்ந்து, பள்ளியின் புதிய கட்டட வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு திண்டிவனம் கல்வி மாவட்ட அலுவலர் (பொ) சி.சாந்தி தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் மு.தண்டபாணி வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் லட்சுமணன், பொதுப்பணித் துறை பொறியாளர்கள் வைத்தியலிங்கம், ரவி வாழ்த்துரை வழங்கினர். இரா.மாசிலாமணி எம்எல்ஏ
குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். ஆசிரியர்கள் ஐ.செந்தில்குமார், எஸ்.செந்தில்குமார், பி.லியோனி, எஸ்.அம்புரோஸ், இ.கோவிந்தன், பி.ஜெயராமன்,
ஏ.குமரவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பட்டதாரி ஆசிரியர் தட்சணாமூர்த்தி நன்றி கூறினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.