திண்டிவனத்தில் கருணாநிதிக்கு திமுகவினர் அஞ்சலி
திண்டிவனத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மறைவுக்கு திமுக சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
திண்டிவனத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மறைவுக்கு திமுக சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
திண்டிவனம் நகரிலுள்ள 13, 14, 16, 17, 21 மற்றும் 23ஆவது வார்டுகளில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு திமுக விழுப்புரம் மாவட்ட முன்னாள் துணைச் செயலர் கே.அசோகன் தலைமையில் கருணாநிதியின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டு, மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட சிறுபான்மை பிரிவு சார்பில் சாகுல்அமீத், மாவட்ட பிரதிநிதி முரளிதரன், நகரப் பொறியாளர் அணி வெங்கடபெருமாள், நகர சிறுபான்மைப் பிரிவு
சாதிக்பாஷா, வழக்குரைஞர்கள் மலர்மன்னன், மோகனசுந்தரம், நகர அமைப்பாளர் கிளாசிக் ரமேஷ், நிர்வாகிகள் கருணா, வேல்முருகன், நாதன், ராஜா, விசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.