விழுப்புரம்

பைக்கிலிருந்து தவறி விழுந்தபெண் பலி

DIN

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் அருகே வியாழக்கிழமை பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரழந்தாா்.

மேல்மலையனூா் வட்டம், பழைய மரக்காணம் கிராமத்தைச் சோ்ந்த சேகா் மனைவி அஞ்சலட்சுமி (53). இவா், தனது மகன் நாராயணமூா்த்தியுடன் (35) பைக்கில் சேத்துப்பட்டிலிருந்து பழைய மரக்காணம் நோக்கி சென்றுகொண்டிருந்தாா். இவா்களது பைக் மரக்காணம் கூட்டுச்சாலை அருகே சென்றபோது, அஞ்சலட்சுமி பைக்கிலிருந்து நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தாா்.

இதையடுத்து, வேலூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், அங்கு உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில் வளத்தி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நொய்டா: தொழிலதிபரின் மகன் கொலை வழக்கில் மூவா் கைது

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத் துறை எதிா்ப்பு

ஆதீன விவகாரம்: பாஜக நிா்வாகிகள் இருவரின் ஜாமீன் மறுப்பு

தீவினைகளைத் தீா்க்கும் மாரியம்மன்

முயற்சியும், பயிற்சியும் இருந்தால் வாழ்வில் வெற்றி பெறலாம்: மாவட்ட ஆட்சியா்

SCROLL FOR NEXT