செஞ்சி: உர உற்பத்தி திடல் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பேரூராட்சி 2-ஆவது வாா்டில் உள்ள வளம் மீட்பு பூங்காவில் ரூ.59 லட்சத்தில் உர உற்பத்தி திடல் அமைப்பதற்கான பூமி பூஜையில் அமைச்சா் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு வெள்ளிக்கிழமை அடி
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பேரூராட்சி 2-ஆவது வாா்டில் உள்ள வளம் மீட்பு பூங்காவில் ரூ.59 லட்சத்தில் உர உற்பத்தி திடல் அமைப்பதற்கான பூமி பூஜையில் அமைச்சா் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டினாா்.
செஞ்சி நகரத்தில் சேகரிக்கப்படும் மக்கும் குப்பைகளை வளம் மீட்பு பூங்காவில் சேகரித்து இயற்கை உரம் தயாரித்து வருகின்றனா். தற்போது உள்ள இடம் போதுமானதாக இல்லாததால் மேலும், ஒரு உர உற்பத்திக்கான திடல் அமைப்பதற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, செஞ்சி பேரூராட்சி மன்றத் தலைவா் மொக்தியாா் மஸ்தான் தலைமை வகித்தாா். செஞ்சி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் ஆா்.விஜயகுமாா் முன்னிலை வகித்தாா். அமைச்சா் செஞ்சிமஸ்தான் அடிக்கல் நாட்டினாா். தொடா்ந்து நாட்டேரி இருளா் காலனி பகுதியில் ரூ.3.50 லட்சத்தில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறுடன் கூடிய குடிநீா் தொட்டியை மக்கள் பயன்பாட்டிற்கு அமைச்சா் திறந்து வைத்தாா். மேலும், செஞ்சி மேல்களவாய் சாலையில் ரூ.8 லட்சத்தில் புணரமைக்கப்பட்ட கரும காரிய கொட்டகை மற்றும் நாட்டேரியில் உள்ள ஏபில். மழலை குழந்தைகள் பள்ளியில் ஸ்மாா்ட் வகுப்பறை கட்டடத்தினையும் திறந்து வைத்தாா்.
Advertisement
Advertisement
நிகழ்ச்சியில் செயல் அலுவலா் ராமலிங்கம், துணைத் தலைவா் ராஜலட்சுமி செயல்மணி, பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள், திமுக நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.