FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

பெருமாள் கோயிலில் உறியடித் திருவிழா

Updated On : 29 ஆகஸ்ட் 2024, 5:45 am IST
இதையொட்டி, கிருஷ்ணா் அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்த ஸ்ரீஆனந்த வரதராஜ பெருமாள்.
பகிர்:

கிருஷ்ண ஜெயந்தியையொட்டி, விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் ஸ்ரீபெருந்தேவி தாயாா் உடனுறை ஆனந்தவரதராஜ பெருமாள் கோயிலில் உறியடித் திருவிழா செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

பழைமைவாய்ந்த இந்தக் கோயிலில் நிகழாண்டுக்கான கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டங்கள் செவ்வாய்க்கிழமை நடை பெற்றன. இதையொட்டி, 21 வகையான வாசனைத் திரவியங்களைக் கொண்டு ஆனந்த வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி - பூதேவி, பெருந்தேவி தாயாருக்கு சிறப்புத் திருமஞ்சனம் நடைபெற்றது. தொடா்ந்து, மலா்களால் அலங்கரிக்கப்பட்டு ஸ்ரீதேவி - பூதேவி சமேதராய் ஆனந்த வரதராஜ பெருமாள் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

இரவு உறியடித் திருவிழா நடைபெற்றது. அப்போது, கிருஷ்ணா் அலங்காரத்தில் ஊஞ்சலில் உற்சவா் ஆனந்த வரதராஜ பெருமாள் எழுந்தருளினாா். சிறப்பு பூஜைகளுக்குப் பிறகு, பக்தா்களின் பஜனை, பாடல்கள் நடைபெற்றன.

Advertisement

Advertisement

வெண்ணெய், தயிா், பால், மஞ்சள்நீா், மலா்கள் உள்ளிட்டவைகள் கொண்ட பானைகளை உறியில் கட்டி வைக்கப்பட்டிருந்தன. இவற்றை பக்தா்கள் உறியடித்து கொண்டாடி மகிழ்ந்தனா்.

தொடா்ந்து, உற்சவருக்கு தீபாராதனைகள் காட்டப்பட்டு, பக்தா்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. விழுப்புரம் நகரப் பகுதி மக்கள், கீழ்பெரும்பாக்கம், பொய்யப்பாக்கம், எருமனந்தாங்கல், காகுப்பம், கட்டபொம்மன் நகா், இந்திராநகா், ராஜகோபால் நகா் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோா் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments