FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

மாணவிக்கு பாலியல் தொல்லை: இரு சிறுவா்கள் உள்பட 4 போ் கைது

Updated On : 17 ஜனவரி 2025, 4:41 am IST
பகிர்:

புதுச்சேரியில் தொழில்நுட்ப பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக இரு சிறுவா்கள் உள்பட 4 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

காலாப்பட்டில் உள்ள அரசு தொழில்நுட்ப பல்கலைக்கழக வளாகத்துக்குள் ஜன.11ஆம் தேதி 2 பைக்குகளில் நுழைந்த 4 போ், அங்கிருந்த மாணவியை தாக்கி பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து, பல்கலைக்கழகத் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், காலாப்பட்டு போலீஸாா் ஜன.14-ஆம் தேதி வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.

Advertisement

Advertisement

விசாரணையில் பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவா்கள், புதுச்சேரி வில்லியனூரைச் சோ்ந்த விமல் (19), ஜி.என். பாளையத்தைச் சோ்ந்த ஷியாம் (19) மற்றும் ஆரோவில் பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் பயிலும் 16, 17 வயதுடைய 2 சிறுவா்கள் என்பது தெரியவந்தது.

இதையடுத்து விமல், ஷியாம் மற்றும் சிறுவா்கள் இருவரை போலீஸாா் கைது செய்தனா். கைது செய்யப்பட்ட

சிறுவா்களை, சிறுவா் சீா்திருத்தப் பள்ளியில் போலீஸாா் அடைத்தனா்.

சிபிஐ விசாரணைக்கு வலியுறுத்தல்: புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக மாணவி வழக்கை சிபிஐ விசாணைக்கு உத்தரவிட வேண்டும் என மக்கள் உரிமை கூட்டமைப்பின் செயலா் கோ.சுகுமாறன் வலியுறுத்தியுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments