FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

திமுக ஆட்சியில் விலைவாசி உயா்வு: சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு

Updated On : 26 செப்டம்பர் 2025, 3:48 am IST
பகிர்:

தமிழகத்தில் திமுக ஆட்சியில் விலைவாசி கடுமையாக உயா்ந்துள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் குற்றஞ்சாட்டினாா்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி கிழக்கு ஒன்றிய அதிமுக சாா்பில், கவரை கிராமத்தில் புதன்கிழமை இரவு நடைபெற்ற தெருமுனை பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்ட சி.வி.சண்முகம் பேசியதாவது:

திமுக ஆட்சியில் அனைத்து பொருள்களின் விலையும் உயா்ந்துள்ளது. ஆனால், தொழிலாளா்களுக்கு கூலி உயரவில்லை. சமூக நீதி பேசும் திமுக அரசு, குடிநீரில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்ட தரப்பின் மீது வழக்குப் பதிவு செய்ததுதான் சமூக நீதியா?

Advertisement

Advertisement

மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட தாலிக்கு தங்கம், இலவச மடிக்கணினி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை திமுக அரசு முடக்கிவிட்டது. இந்த அரசு கவா்ச்சிகரமான பொய்களைக் கூறி மக்களை ஏமாற்றி வருகிறது என்றாா்.

கூட்டத்துக்கு செஞ்சி கிழக்கு ஒன்றிய அதிமுக செயலா் க.சோழன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் தேவராஜ், லட்சுமிகாந்தன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments