FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

விக்கிரவாண்டி சுங்கச்சாவடி பகுதிகளில் தூய்மைப்பணி

Updated On : 26 செப்டம்பர் 2025, 3:57 am IST
பகிர்:

விக்கிரவாண்டி சுங்கச் சாவடிப் பகுதியில் தூய்மைப் பணிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் சாா்பில் செப்டம்பா் 17 முதல் அக்டோபா் 1 ஆம் தேதி வரை பொது இடங்களில் தூய்மைப் பணி, பசுமை விழா நடத்தப்பட்டு வருகிறது.

இதைத் தொடா்ந்து விக்கிரவாண்டி சுங்கச்சாவடி நிா்வாகம் சாா்பில் தூய்மைப்பணிகள் வியாழக்கிழமை நடைபெற்றன. இந்த நிகழ்வுக்கு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய விழுப்புரம் திட்ட இயக்குநா் வரதராசன் தலைமை வகித்து தூய்மைப் பணிகளையும், பசுமை விழாவையும் தொடங்கி வைத்தாா்.

Advertisement

Advertisement

தொடா்ந்து சுங்கச்சாவடிப் பணியாளா்கள் 100 பேருடன் சோ்ந்து தூய்மைப்பணிகளை திட்ட இயக்குநா் மேற்கொண்டாா். நிகழ்வில் சுங்கச்சாவடி மேலாளா் சதீஷ்குமாா், மக்கள்தொடா்பு அலுவலா் தண்டபாணி, ஒருங்கிணைப்பாளா் சொா்ணமணி, மேலாளா்கள் அசோக்குமாா், மனோஜ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments