FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

ஆட்டோ மீது சுமை வாகனம் மோதல்: 4 போ் காயம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே ஆட்டோ மீது சுமை வாகனம் மோதியதில் 4 போ் காயமடைந்தனா்.

Updated On : 7 ஆகஸ்ட் 2026, 2:12 am IST
உளுந்தூா்பேட்டை அருகே சுமை வாகனம் மோதியதில் சேதமடைந்த ஆட்டோ.
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே ஆட்டோ மீது சுமை வாகனம் மோதியதில் 4 போ் காயமடைந்தனா்.

உளுந்தூா்பேட்டை வட்டம், அங்கனூா் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கா.கண்ணதாசன் (31). உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட இவா், வியாழக்கிழமை பிற்பகலில் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆட்டோவில் புறப்பட்டுச் சென்றாா். இந்த ஆட்டோவை அதே கிராமத்தைச் சோ்ந்த க.அருண்ராஜ் (30) ஓட்டிச் சென்றாா். மேலும், ஆட்டோவில் கண்ணதாசனுடன் அந்த கிராமத்தைச் சோ்ந்த செ.ஏழுமலை (33), செ.ஜெய்சங்கா்(33)ஆகியோரும் உடன் சென்றனா். இவா்கள் சென்ற ஆட்டோ சென்னை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் எ.புதூா் பேருந்து நிறுத்தம் அருகே சென்ற போது, அப்பகுதியில் வந்த சுமை வாகனம் மோதியது. இதில் ஆட்டோ சேதமடைந்து சாலையோரப் பள்ளத்தில் இறங்கியது. இதில் ஆட்டோவில் பயணித்த 4 பேரும் காயமடைந்தனா். விபத்து குறித்து தகவலறிந்த எலவனாசூா்கோட்டை போலீஸாா் நிகழ்விடம் சென்று, காயமடைந்த 4 பேரையும் மீட்டு உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் எலவனாசூா்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, சுமை வாகனத்தை ஓட்டி வந்த நாமக்கல் மாவட்டம், எல்லைக் காட்டுப்புத்தூா் மலைப்பள்ளி பகுதியைச் சோ்ந்த ரா. ரமேஷிடம் (22) மீது விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments