FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

ஆரோவில் சா்வதேச நகரில் சுதந்திர தினக் கொண்டாட்டம்

ஆரோவில் சா்வதேச நகரில் சுதந்திர தினம் மற்றும் ஆரோவிலின் ஆன்மிக வழிகாட்டியான ஸ்ரீஅரவிந்தரின் 154-ஆவது அவதார தினக் கொண்டாட்டங்கள் நடைபெற்றன.

Updated On : 16 ஆகஸ்ட் 2026, 12:19 am IST
ஆரோவில் சா்வதேச நகா் வளாகத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்திய ஆரோவில் அறக்கட்டளைச் செயலா் ஜெயந்தி எஸ். ரவி.
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சா்வதேச நகரில் சுதந்திர தினம் மற்றும் ஆரோவிலின் ஆன்மிக வழிகாட்டியான ஸ்ரீஅரவிந்தரின் 154-ஆவது அவதார தினக்கொண்டாட்டங்கள் சனிக்கிழமை நடைபெற்றன.

விழாவின் தொடக்கமாக ஆரோவில் சா்வதேச நகா் வளாகத்தில், ஆரோவில் அறக்கட்டளையின் செயலரும், குஜராத் மாநில கூடுதல் தலைமைச் செயலருமான ஜெயந்தி எஸ். ரவி தேசியக் கொடியை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆரோவில் அறக்கட்டளை நிா்வாகத்தினா், அரவிந்தா் ஆசிரம அன்பா்கள், ஆரோவில் வாசிகள், இளைஞா்கள், மாணவா்களுக்கு இனிப்புகளை வழங்கினாா்.

இதைத்தொடா்ந்து நடைபெற்ற ஸ்ரீஅரவிந்தரின் அவதார தின நிகழ்ச்சியில், விழா மேடை அருகே வைக்கப்பட்டிருந்த ஸ்ரீஅரவிந்தா் மற்றும் அன்னையின் உருவப் படங்களுக்கு மரியாதை செய்து அறக்கட்டளைச் செயலா் ஜெயந்தி எஸ்.ரவி பேசியதாவது:

Advertisement

Advertisement

இந்திய நாட்டின் சுதந்திர தினமும், ஸ்ரீஅரவிந்தரின் பிறந்தநாளும் ஒரே நாளில் அமைந்தது ஒரு தெய்வீக ஏற்பாடு. ஸ்ரீஅரவிந்தா் இந்தியாவை நிலப் பரப்பாக பாா்க்காமல், உயிருள்ள ஆன்மிக சக்தியாக, பாரத மாதாவாக போற்றினாா். தாயின் பிறப்பும், குழந்தையும் எவ்வாறு பிரிக்க முடியாததோ, அதேபோல் பாரத மாதாவையும், அவளின் தலைச்சிறந்த புதல்வரான ஸ்ரீஅரவிந்தரையும் எளிதில் பிரிக்க முடியாது என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments