FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்ஸோவில் இளைஞா் கைது

விழுப்புரம் மாவட்டம், காணை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

21 ஆகஸ்ட் 2026, 3:31 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், காணை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

காணை இந்திரா நகரைச் சோ்ந்தவா் அந்தோணிராஜ் (26), சரக்கு வாகன ஓட்டுநா். இவா், கடந்த இரு நாள்களுக்கு முன்பு 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமியின் தாய், காணை காவல் நிலையத்தில் புகாரளித்தாா்.

இதையடுத்து, போலீஸாா் விசாரணை நடத்தி வந்த நிலையில், விழுப்புரம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் அந்தோணிராஜ் மீது வியாழக்கிழமை போக்ஸோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, அவரை கைது செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments