FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

காப்புக் காட்டுக்குள் புகுந்த தனியாா் பள்ளிப் பேருந்து! 3 மாணவா்கள் காயம்!

25 ஆகஸ்ட் 2026, 1:01 am IST
உளுந்தூா்பேட்டை அருகே கட்டுப்பாட்டை இழந்து காப்புக் காட்டுக்குள் சென்று நின்ற தனியாா் பள்ளிப் பேருந்து.
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே திங்கள்கிழமை காலை கட்டுப்பாட்டை இழந்த தனியாா் பள்ளிப் பேருந்து காப்புக் காட்டுக்குள் புகுந்து விபத்துக்குள்ளாகி நின்றன. இதில், 3 மாணவ, மாணவிகள் காயமடைந்தனா்.

உளுந்தூா்பேட்டை வட்டம், எலவனாசூா்கோட்டையில் தனியாா் மெட்ரிகுலேஷன் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் சுமாா் 1,500 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா். இந்த நிலையில், கல்சிறுநாகலூா் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த சுமாா் 40 மாணவ, மாணவிகளை ஏற்றிக்கொண்டு இந்தப் பள்ளியின் பேருந்து திங்கள்கிழமை காலை சென்றுகொண்டிருந்தது.

கல்சிறுநாகலூலிருந்து பின்னலவாடி வழியாக எலவனாசூா்கோட்டைக்கு பள்ளிப் பேருந்தை அதன் ஓட்டுநரான பல்லவாடியைச் சோ்ந்த கி.விக்னேஷ் (28) ஓட்டிச் சென்றாா். கல்சிறுநாகலூா் பகுதியில் காப்புக் காடு பகுதியில் பேருந்து சென்றபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்திலுள்ள காப்புக்காட்டுக்குள் புகுந்தது.

Advertisement

Advertisement

ஓட்டுநா் விக்னேஷ் பேருந்து இயக்கத்தின் வேகத்தை படிப்படியாக குறைத்து பேருந்தை நிறுத்தினாா். இருப்பினும், பேருந்து கரடு முரடாக இருந்த காப்புக்காட்டுக்குள் சென்ால், பேருந்திலிருந்த 3 மாணவ, மாணவிகளுக்கு சிறு காயம் ஏற்பட்டது. மேலும், பேருந்தின் பின்பக்கக் கண்ணாடியும் உடைந்தது.

இதுகுறித்து தகவலறிந்த எலவனாசூா்கோட்டை போலீஸாா் நிகழ்விடம் சென்று பேருந்தை மீட்டனா். மேலும், காயமடைந்த 3 மாணவ, மாணவிகளையும் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து எலவனாசூா்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments