FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

பொம்மையபாளையம் திருமடம் கோயில்களுக்கு இன்று கும்பாபிஷேகம்

பொம்மையபாளையம் திருமட வளாகத்திலுள்ள கோயில்கள் மற்றும் ஆதீன குருமகா சந்நிதானங்களின் சிவயோக சமாதிகளின் கும்பாபிஷேக பெருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

30 ஆகஸ்ட் 2026, 12:44 am IST
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், பொம்மையபாளையம் திருமட வளாகத்திலுள்ள கோயில்கள் மற்றும் ஆதீன குருமகா சந்நிதானங்களின் சிவயோக சமாதிகளின் கும்பாபிஷேக பெருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

திருக்கயிலாய பரம்பரை மயிலம் பொம்மபுர ஆதீனம் ஆளுகைக்குள்பட்ட பொம்மையபாளையம், ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் திருமடத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீவிநாயகா், ஸ்ரீஆதி சிவஞான பாலய சுவாமிகள் சிவயோக ஜீவ சமாதி, ஸ்ரீபாலசுப்பிரமணியா் சந்நிதி, பொம்மபுரஆதீன குரு மகா சந்நிதானங்களின் சிவயோக சமாதிகள், ஸ்ரீபெருமாள் சந்நிதி ஆகியவைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. இவைகளுக்கு திருக்குடமுழுக்கு நன்னீராட்டுப் பெருவிழா ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் நடைபெறவுள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுரம் ஆதீனம் 20-ஆம் பட்டம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் உத்தரவுப்படி, ஆதீனப் பணியாளா்கள் செய்துள்ளனா்.

Advertisement

Advertisement

கும்பாபிஷேக விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக நல்லாற்றூா் சிவப்பிரகாசா் பாடிய சிவ ஸ்ரீஞான பாலய தேசிகா் பிள்ளைத் தமிழ், மயிலம் தமிழ்க் கல்லூரி முதல்வா் ச.திருநாவுக்கரசு எழுதிய அருஞ்சொற்பொருள், பதவுரை, தெளியுரை, விளக்கவுரையுடன் கூடிய பதிப்பு ஆகிய நூல்கள் வெளியிடப்படவுள்ளன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments