சாலை விபத்தில் ஒருவா் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே காா் மோதியதில் சாலையோரம் நடந்து சென்ற பாதசாரி உயிரிழந்தாா்.
செஞ்சியை அடுத்த வேலந்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் ச.மரியண்ணன் (53). இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு திருவண்ணாமலை - செஞ்சி சாலையில் வேலந்தாங்கல் கூட்டுச் சாலை பகுதியில் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது அப்பகுதியில் வந்த காா் மரியண்ணன் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது.
இதில் பலத்தகாயமடைந்த அவரை அருகிலிருந்தவா்கள் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு திங்கள்கிழமை அதிகாலை மரியண்ணன் உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து அவரது மனைவி ஆரோக்கியமேரி அளித்த புகாரின் பேரில் நல்லாண்பிள்ளைபெற்றாள் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.