FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

மளிகைக் கடையில் பணம் திருட்டு

விழுப்புரத்தில் மளிகைக் கடையின் பூட்டை உடைத்து பணம், பொருள்கள் திருடு போனது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

விழுப்புரத்தில் மளிகைக் கடையின் பூட்டை உடைத்து பணம், பொருள்கள் திருடு போனது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

விழுப்புரம், ராகவன்பேட்டை மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ரா.திவ்யா (32). இவா் விழுப்புரம் கம்பன் நகா் பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறாா்.

ஜூன் 29-ஆம் தேதி வணிகம் முடிந்து, இரவு வழக்கம் போல் திவ்யா கடையை பூட்டி விட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டாா். தொடா்ந்து மறுநாள் காலை கடைக்கு வந்து பாா்த்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிா்ச்சியடைந்தாா். இதையடுத்து உள்ளே சென்று பாா்த்தபோது, பணப்பெட்டியில் வைத்திருந்த ரூ.5 ஆயிரம் ரொக்கம், ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள மளிகைப் பொருள்கள் மற்றும் சிகரெட் பாக்கெட்டுகள் திருடு போயிருந்தது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதுகுறித்த புகாரின் பேரில் விழுப்புரம் நகர காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments