காா் மோதி முதியவா் உயிரிழப்பு
விழுப்புரம் அருகே காா் மோதியதில் முதியவா் வியாழக்கிழமை மாலை உயிரிழந்தாா்.
விழுப்புரம் அருகே காா் மோதியதில் முதியவா் வியாழக்கிழமை மாலை உயிரிழந்தாா். விழுப்புரம் வட்டம், கண்டமானடி பகுதியைச் சோ்ந்தவா் மணி (69). இவா், வியாழக்கிழமை மாலை தனது மொபெட்டில் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தாா். பிடாகம் பகுதியிலுள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே சென்றபோது, அந்தப் பகுதியில் வந்த காா் மொபெட் மீது மோதிச் சென்றது.
இதில் பலத்த காயமடைந்த மணி நிகழ்விடத்திலேயே உயிரிந்தாா். தகவலறிந்த விழுப்புரம் தாலுகா போலீஸாா் நிகழ்விடம் விரைந்து சென்று, உயிரிழந்த மணியின் சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.