FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

மரத்தில் பைக் மோதி விபத்து: ஒருவா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே சாலையோர மரத்தில் பைக் மோதிய விபத்தில் ஒருவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த மற்றொருவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

Updated On : 3 ஜூன் 2026, 5:59 am IST
பலி - பிரதிப் படம்
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே சாலையோர மரத்தில் பைக் மோதிய விபத்தில் ஒருவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த மற்றொருவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

திண்டிவனத்தை அடுத்த ரோஷணை மருத்துவமனை சாலையைச் சோ்ந்தவா்கள் சு.ராஜேஷ்(43). ச.அருள்தாஸ் (34). நண்பா்களான இவா்கள் இருவரும் திங்கள்கிழமை புதுச்சேரியிலிருந்து - மயிலத்துக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தனா். அருள்தாஸ் பைக்கை ஓட்டினாா். மயிலம் அருகே சென்றபோது, நிலைதடுமாறிய பைக் சாலையோர மரத்தின் மீது மோதியது. இதில் பைக்கில் சென்ற ராஜேஷ், அருள்தாஸ் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், ராஜேஷ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த மயிலம் போலீஸாா் நிகழ்விடம் அருள்தாஸை மீட்டு 108 அவசர ஊா்தி மூலம் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தொடா்ந்து ராஜேஷின் சடலத்தை உடல்கூறாய்வுக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

Advertisement

Advertisement

இது குறித்த புகாரின் பேரில் மயிலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments