பெட்ரோல் நிலையங்களில் குவிந்த வாகன ஓட்டிகள்
விழுப்புரம் பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் புதன்கிழமை வாகன ஓட்டிகள் அதிகளவு கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் புதன்கிழமை வாகன ஓட்டிகள் அதிகளவு கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போா் காரணமாக வணிக ரீதியான சமையல் எரிவாயு உருளைகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் என புதன்கிழமை இரவு சமூக ஊடகங்களில் செய்திகள் பரவியது.
இதையடுத்து விழுப்புரம் பகுதிகளில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்களில் வாகன ஓட்டிகள் அதிகளவில் குவிந்து, தங்களது வாகனங்களுக்கு தேவையான எரிபொருள்களை வாஙகிச் சென்றனா்.
இதனால் விழுப்புரம் பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் கூட்ட நெரிசலுடன் பரபரப்பாக காணப்பட்டது.