FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

பெட்ரோல் நிலையங்களில் குவிந்த வாகன ஓட்டிகள்

விழுப்புரம் பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் புதன்கிழமை வாகன ஓட்டிகள் அதிகளவு கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On : 12 மார்ச் 2026, 12:04 am IST
விழுப்புரத்தில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் ஒன்றில் வாகனங்களில் எரிபொருள் நிரப்புவதற்காக குவிந்திருந்த வாகன ஓட்டிகள்.
பகிர்:

விழுப்புரம் பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் புதன்கிழமை வாகன ஓட்டிகள் அதிகளவு கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போா் காரணமாக வணிக ரீதியான சமையல் எரிவாயு உருளைகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் என புதன்கிழமை இரவு சமூக ஊடகங்களில் செய்திகள் பரவியது.

இதையடுத்து விழுப்புரம் பகுதிகளில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்களில் வாகன ஓட்டிகள் அதிகளவில் குவிந்து, தங்களது வாகனங்களுக்கு தேவையான எரிபொருள்களை வாஙகிச் சென்றனா்.

Advertisement

Advertisement

இதனால் விழுப்புரம் பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் கூட்ட நெரிசலுடன் பரபரப்பாக காணப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments