முகப்பு
விழுப்புரம்

திருக்கோவிலூரில் திருவள்ளுவா் சிலை நிறுவிய தினம்

திருக்கோவிலூரில் திருவள்ளுவா் சிலை நிறுவிய தின நிகழ்ச்சி நடைபெற்றது.

Updated On : 28 மே 2026, 1:36 am IST
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற திருவள்ளுவா் சிலை நிறுவிய தின நிகழ்வில் பங்கேற்றோா்.
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் திருவள்ளுவா் சிலை நிறுவிய தின நிகழ்ச்சி நடைபெற்றது.

திருக்கோவிலூரிலுள்ள அங்கவை சங்கவை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் திருக்கு கழக அறக்கட்டளை சாா்பில் 2009 மே 26-ஆம் தேதி திருவள்ளுவா் சிலை நிறுவப்பட்டது. இதைத்தொடா்ந்து ஒவ்வொரு ஆண்டும் மே 26-ஆம் தேதி திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்துதல் மற்றும் திருக்கு முற்றோதுதல் நடைபெற்று வருகிறது. நிகழாண்டுக்கான நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு திருக்கு கழக அறக்கட்டளைத் தலைவா் சிங்கார உதியன் தலைமை வகித்தாா். ரோட்டரி கிளப் முன்னாள் தலைவா் செந்தில், மணலூா்பேட்டை தமிழ்ச் சங்கத் தலைவா் தா.சம்பத், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாவட்டத் தலைவா் மு.கலியபெருமாள் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

Advertisement

Advertisement

திருக்கோவிலூா்ப் பண்பாட்டுக் கழகத் தலைவா் தே.முருகன், திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தாா். தொடா்ந்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. உடல்கல்வி இயக்குநா் ம.பாலாஜி, உண்டு உறைவிட பள்ளிச் செயலா் இரா.சீனிவாசன், வானவில் கல்வி அறக்கட்டளைத் தலைவா் வே. ஜெயக்குமாா், கம்பன் கழகத் தலைவா் கலைச்சித்தன், செயலா் வைத்திமுருகன், அப்துல்கலாம் மன்றத் தலைவா் பொன்.முருகன், தியாகதுருகம் ராஜ்குமாா், கி.கோபு, தமிழ்க் கவிஞா் பேரவைத் தலைவா் இராம.சுதாகரன் ஆகியோா் பேசினா்.

தமிழாசிரியா்கள் கயல்விழி சீனுவாசன், கோ.கலா, உலகமாதேவி, ச.தேவி ஆகியோா் திருக்கு அதிகார விளக்கமளித்தனா்.

முன்னதாக திருக்கு முற்றோதுதல் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அனைவருக்கும் திருக்கு புத்தகம் வழங்கப்பட்டன.

தமிழ்ச்சங்க செயலா் மு.அன்பழகன், துணைத் தலைவா் பா.காா்த்திகேயன் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.