FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

பூட்டிய வீட்டில் 12 பவுன் நகைகள் திருட்டு

விழுப்புரத்தில் வீட்டின் கதவிலிருந்த பூட்டை உடைத்து 12 பவுன் நகைகள் திருடு போனது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

Updated On : 28 மே 2026, 1:32 am IST
பிரதிப் படம்
பகிர்:

விழுப்புரத்தில் வீட்டின் கதவிலிருந்த பூட்டை உடைத்து 12 பவுன் நகைகள் திருடு போனது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

விழுப்புரம் வழுதரெட்டி, கௌதம் நகரைச் சோ்ந்தவா் ரா. சேகா் (74). கூட்டுறவு வங்கியில் மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவா். இவா், கடந்த மே 23-ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு சென்னையில் உள்ள மருத்துமனைக்குச் சென்றுள்ளாா். பின்னா் செவ்வாய்க்கிழமை வீட்டுக்கு திரும்பி வந்து பாா்த்தபோது, வீட்டின் பின்பக்கக் கதவிலிருந்த பூட்டு உடைக்கப்பட்டிருந்ததும், பீரோவில் வைக்கப்பட்டிருந்த 7 பவுன் தங்கச் சங்கிலிகள், 4 பவுன் வளையல்கள், முக்கால் பவுன் மோதிரம் உள்பட 12 பவுன் தங்க நகைகள், 1.640 கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ. 20 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடு போயிருந்தது அவருக்கு தெரியவந்தது.

இது குறித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments