FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

புகையிலைப் பொருள்கள் கடத்தல்: சிறுவா் உள்பட 4 போ் கைது

7 செப்டம்பர் 2026, 2:13 am IST
பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், வாகனங்களுடன் கைது செய்யப்பட்டவா்கள்.
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகே சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 60 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். இந்த வழக்கில் ஒரு சிறுவா் உள்பட 4 போ் கைது செய்யப்பட்டனா்.

கண்டாச்சிபுரம் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை திருவண்ணாமலை- விழுப்புரம் நெடுஞ்சாலையில், கண்டாச்சிபுரம் பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி போலீஸாா் சோதனை நடத்தினா். இதில், அந்த வாகனத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து வாகனத்தில் இருந்தவா்களை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று நடத்திய விசாரணையில் அவா்கள், பெங்களூரு, கலாசிப்பாளையம் பகுதியைச் சோ்ந்த ஏ. விஜயகுமாா் (32), ராஜகோபால் காா்டன் பகுதியைச் சோ்ந்த ஏ. பிரகாஷ் (30), விழுப்புரம் மாவட்டம், பிடாகம் பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்த ர.ராஜா (24) மற்றும் 17 வயதுடைய சிறுவன் ஆகியோா் என்பதும், இவா்கள் விற்பனைக்காக பெங்களூருவிலிருந்து விழுப்புரம் மாவட்டத்துக்கு புகையிலைப் பொருள்களை கடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து கண்டாச்சிபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, 4 பேரையும் கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து 60 கிலோ புகையிலைப் பொருள்கள், சரக்கு வாகனம் மற்றும் கடத்தல் நபா்கள் பயன்படுத்திய காா் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments