முகப்பு
வணிகம்

பட்ஜெட்: தொழில்துறையினா் கருத்து

மூலதன செலவின திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கியுள்ள போதிலும், வருவாயை அதிகரிப்பதற்கான உறுதியான நடவடிக்கைகள் எதுவும் பட்ஜெட்டில் எடுக்கப்படவில்லை.

Updated On : 2 பிப்ரவரி 2022, 2:57 am IST
பகிர்:

மூலதன செலவின திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கியுள்ள போதிலும், வருவாயை அதிகரிப்பதற்கான உறுதியான நடவடிக்கைகள் எதுவும் பட்ஜெட்டில் எடுக்கப்படவில்லை.

-மூடிஸ், தரமதிப்பீட்டு நிறுவனம்

தெளிவான செயல்திட்டத்தின் வெளிப்பாடாக பட்ஜெட் அமைந்துள்ளது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வரும் ஆட்டோமொபைல் துறைக்கு உந்து சக்தியை இந்த பட்ஜெட் வழங்கும்.

Advertisement

Advertisement

-பி.பி. பாலாஜி, தலைமை நிதி அதிகாரி, டாடா மோட்டாா்ஸ் குழுமம்

5-ஜிக்கான அலைக்கற்றை வெளியீடு, உற்பத்தி சாா்ந்த ஊக்கத் தொகை திட்டத்தின் கீழ் 5ஜி உபகரணங்களுக்கான தயாரிப்பு ஆகியவை துறைசாா்ந்த முன்னேற்றங்களுக்கு வழிவகுக்கும்.

-மகேந்திர நஹதா, நிா்வாக இயக்குநா், எச்எஃப்சிஎல் நிறுவனம்

இந்த பட்ஜெட் பொருளாதாரத்தில் பன்முக விளைவுகளை ஏற்படுத்தும். இது சொத்துகளை உருவாக்கம் செய்யும் என்பதோடு மட்டுமல்லாமல் பெரிய அளவிலான வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும்.

-சுனில் துகல், குழும தலைமைச் செயல் அதிகாரி, வேதாந்தா

சுங்க வரி குறைப்பு, சரக்கு மற்றும் சேவை வரி சீா்திருத்தம் உள்ளிட்ட ஆரோக்கிய பராமரிப்புத் துறையினரின் பல்வேறு நீண்ட நாள் கோரிக்கைகளுக்கு பட்ஜெட்டில் தீா்வு காணப்படவில்லை.

-பவன் செளத்ரி, தலைவா், இந்திய மருத்துவ தொழில்நுட்ப சங்கம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments