முகப்பு
சினிமா

பாகுபலி மீண்டும் திரைக்கு வருகிறது: அக்டோபரில் மறுவெளியீடு!

Updated On : 28 ஏப்ரல், 2025 at 1:43 PM
- படம் | பாகுபலி தயாரிப்பு நிறுவனம்
பகிர்:

கட்டப்பா எதற்காக பாகுபலியைக் கொன்றார்? என்ற பெரும் சஸ்பென்ஸுடன் முடிக்கப்பட்டு பார்வையாளர்களை ஏங்கச் செய்த ‘பாகுபலி’ திரைப்படம், வரும் அக்டோபர் மாதம் மறுவெளியீடாக திரையரங்குகளில் வெளியிடப்படவுள்ளது. இந்த தகவலை படத் தயாரிப்பு நிறுவனம் இன்று(ஏப். 28) வெளியிட்டுள்ளது.

பாகுபலி வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதைக் குறிக்கும் பொருட்டு, அதனை மீண்டும் திரையிட முடிவெடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபரில் எந்த தேதியில் படம் மறுவெளியீடாகும் என்பது பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.