பாகுபலி மீண்டும் திரைக்கு வருகிறது: அக்டோபரில் மறுவெளியீடு!
கட்டப்பா எதற்காக பாகுபலியைக் கொன்றார்? என்ற பெரும் சஸ்பென்ஸுடன் முடிக்கப்பட்டு பார்வையாளர்களை ஏங்கச் செய்த ‘பாகுபலி’ திரைப்படம், வரும் அக்டோபர் மாதம் மறுவெளியீடாக திரையரங்குகளில் வெளியிடப்படவுள்ளது. இந்த தகவலை படத் தயாரிப்பு நிறுவனம் இன்று(ஏப். 28) வெளியிட்டுள்ளது.
பாகுபலி வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதைக் குறிக்கும் பொருட்டு, அதனை மீண்டும் திரையிட முடிவெடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபரில் எந்த தேதியில் படம் மறுவெளியீடாகும் என்பது பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.