ராணா டகுபதியின் நானே ராஜா, நானே மந்திரி டிரெய்லர்!
பாகுபலியில் ‘பல்லாள தேவனாக நெகடிவ் கதாபாத்திரத்தில் நடித்து ஏராளமான ரசிகர்களை ஈர்த்துக் கொண்டவரான ராணா, இத்திரைப்படத்தில் முதலமைச்சராக விரும்பும் ‘ஜோகேந்திரா’ எனும் இளைஞராக நடித்திருக்கிறார்.
இன்றைய தேதிக்கு, பாகுபலி மூலம் இந்தியா முழுவதும் அறிமுகம் தேவையில்லாத பிரபலமாகியிருக்கும் ராணா டகுபதியின் வெளிவரவிருக்கும் புதிய திரைப்படமான ‘நானே ராஜா, நானே மந்திரி’ டிரெய்லர் நேற்று வெளியானது. பாகுபலியில் ‘பல்லாள தேவனாக நெகடிவ் கதாபாத்திரத்தில் நடித்து ஏராளமான ரசிகர்களை ஈர்த்துக் கொண்டவரான ராணா, இத்திரைப்படத்தில் முதலமைச்சராக விரும்பும் ‘ஜோகேந்திரா’ எனும் இளைஞராக நடித்திருக்கிறார்.
இதில் காஜல் அகர்வால் ராணாவின் மனைவியாகக் காட்டப் படுகிறார். டிரெய்லரைப் பொறுத்தவரை காதல் நிறந்த அன்பான கணவனாக இருக்கும் ஜோகேந்திரா, தன் மனைவி கொல்லப் பட்டதும் அதற்கு பழி வாங்க முதலமைச்சராக விரும்புவதைப் போல சில காட்சிகள் வருகின்றன. மேலும் ராணா, காஜலோடு இத்திரைப்படத்தில் நவ்தீப் மற்றும் காதரீன் தெரேஸாவும் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள் என்பதால் டிபிக்கல் தெலுங்கு பொலிடிக்கல் மசாலா திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது என்பதில் சந்தேகமே இல்லை. இயக்குனர் தேஜா இயக்கத்தில் இத்திரைப்படத்தை தயாரித்திருப்பவர்கள் சுரேஷ் புரடக்ஷன்ஸ் நிறுவனத்துக்காக சுரேஷ் டகுபதி மற்றும் பிளானட் என்ட்டர்டெயின் மெண்ட் நிறுவனத்துக்காக கிரண் ரெட்டி.
படத்தின் டிரெய்லர்...
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.