FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

சாவியின் பேத்தி நான், தமிழை அவமதிக்க மாட்டேன்: பிக் பாஸில் இருந்து வெளியேறிய வைஷ்ணவி விளக்கம்!

டேனியலின் திட்டம் என்னவென்றால், தமிழைப் பயன்படுத்தி மக்களிடம் அனுதாப ஓட்டுகள் பெறவேண்டும் என்பதுதான்...

Updated On : 20 ஆகஸ்ட் 2018, 3:43 pm IST
பகிர்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து நேற்று வெளியேறினார் வைஷ்ணவி.

கடந்த வாரம் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் வைஷ்ணவி தமிழை அவமதிப்பாக நடிகர் டேனியல் குற்றம் சுமத்தினார். இதற்கு ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார் வைஷ்ணவி. அவர் கூறியதாவது: 

டேனியலின் திட்டம் என்னவென்றால், தமிழைப் பயன்படுத்தி மக்களிடம் அனுதாப ஓட்டுகள் பெறவேண்டும் என்பதுதான். இதுபோல முதல்தடவையாக அவர் சொல்லவில்லை. ஆனால் அது ஒளிபரப்பானதா என்று எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை அது அவருடைய திட்டம் என அவர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். என் தாத்தா சாவி என்பதை அவர்கள் மறந்திருக்கலாம். அவர் பிரபல தமிழ் எழுத்தாளர். என்னால் மொழியைச் சரியாகப் பேசமுடியாமல் போகலாம். ஆனால் மொழியை ஒருபோதும் அவமதிக்கமாட்டேன். பார்வையாளர்கள் அந்தளவுக்கு முட்டாள்கள் அல்ல என்று கூறியுள்ளார்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments