குடிபோதையில் கார் ஒட்டி விபத்து: கோலிவுட் நடிகர் கைதாகி விடுதலை
குடிபோதையில் கார் ஒட்டி விபத்து ஏற்படுத்தியதாக பிரபல கோலிவுட் நடிகர் கைதாகி பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
சென்னை: குடிபோதையில் கார் ஒட்டி விபத்து ஏற்படுத்தியதாக பிரபல கோலிவுட் நடிகர் கைதாகி பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
பிரபல இயக்குநர் பி.வாசுவின் மகன் நடிகர் சக்தி. சின்ன தம்பி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். பின்னர் தொடர்ந்து பல படங்களில் குழந்தை நட்சத்திர வேடங்களில் நடித்துள்ளார்.
கடந்த 2007-ஆம் ஆண்டு வெளியான தொட்டால் பூ மலரும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆனார். பின்னர் நினைத்தாலே இனிக்கும், ஆட்டநாயகன், ஏதோ செய்தாய் என்னை, தற்காப்பு, சிவலிங்கா, 7 நாட்கள் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'பிக்பாஸ்' நிகழ்ச்சியிலும் பங்கேற்றிருந்தார்.
Advertisement
Advertisement
இந்நிலையில் குடிபோதையில் கார் ஒட்டி விபத்து ஏற்படுத்தியதாக சக்தி போலீசாரால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
சென்னை சூளைமேடு பகுதியில் செவ்வாய் அதிகாலை மதுபோதையில் காரை ஓட்டி வந்த நடிகர் சக்தி, சாலையில் சென்றவர் மீது மோதி விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்றுள்ளார். உடனடியாக அங்கிருந்த பொதுமக்கள் விரட்டி சென்று அவரை பிடித்துள்ளனர். இதுபற்றி அவர்கள் போலீசாரிடமும் தகவல் தெரிவித்து உள்ளனர்.
இதுதொடர்பாக அண்ணாநகர் போக்குவரத்து போலீசார் சக்தியிடம் விசாரணை நடத்தி அவரைக் கைது செய்தனர். பின்னர் அவர் சொந்த ஜாமினில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.