முகப்பு
செய்திகள்

நடிகர் விஜய்யின் 'தளபதி 67' - லோகேஷ் செய்த பெரிய மாற்றம்

நடிகர் விஜய்யின் தளபதி 67 படத்தின் கதையில் இயக்குநர் லோகேஷ் பெரிய மாற்றம் ஒன்றை செய்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. 

Updated On : 18 ஆகஸ்ட் 2022, 3:51 pm IST
பகிர்:

நடிகர் விஜய்யின் தளபதி 67 படத்தின் கதையில் இயக்குநர் லோகேஷ் பெரிய மாற்றம் ஒன்றை செய்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. 

விக்ரம் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக தளபதி 67 படத்தின் முன் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டுவருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் துவங்கும் என்று கூறப்படுகிறது. 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். 

இந்த நிலையில் இந்தப் படத்தில் காதல் காட்சிகள், பாடல்கள் எதுவும் இல்லாமல் கைதி படம் போன்று முழுக்க முழுக்க ஆக்சன் படமாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. காதல் காட்சிகள், பாடல்கள் இல்லாமல் வெளியாகும் முதல் விஜய் படமாக தளபதி 67 இருக்கப்போகிறது.

Advertisement

Advertisement

இந்தப் படத்தில் இயக்குநர் கௌதம் மேனன் வில்லனாக நடிக்கவிருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் அவை இன்னமும் உறுதபடுத்தப்படவில்லை. இந்தப் படத்துக்கு இயக்குநர் ரத்னகுமார் வசனம் எழுதுகிறார். ஏற்கனவே மாஸ்டர் மற்றும் விக்ரம் படங்களுக்கும் ரத்னகுமார் வசனம் எழுதியிருந்தார். 

 விக்ரம் படத்தில் கைதி படக் கதாப்பாத்திரங்கள் இடம்பெற்றது, இரண்டு படங்களுக்கும் ஒரே கதைக்களம் என்பதால் லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ் என்ற வார்த்தை பிரபலமானது. தற்போது தளபதி 67 படமும் லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ் ஆக இருக்குமா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments