பீப் பாடல் விவகாரம்: நடிகர் சிம்பு மீதான வழக்கு ரத்து
பீப் பாடல் விவகாரத்தில் நடிகர் சிம்பு மீது பதியப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 1:55 PM
பீப் பாடல் விவகாரத்தில் நடிகர் சிம்பு மீது பதியப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
கடந்த 2018-ஆம் ஆண்டில் நடிகர் சிம்பு தானே எழுதிப் பாடிய ‘பீப் சாங்’ என்கிற பாடல் பெண்களைக் கொச்சைப்படுத்துவதாக தமிழகம் முழுவதும் பல கண்டனங்கள் எழுந்ததுடன் சிம்பு மீது சில அமைப்புகள் வழக்குத் தொடுத்தனர்.
அதில் கோவை காவல்துறை பதிந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம். கோவை நீதிபதி விசாரணை அடிப்படையில் புகாரில் போதுமான ஆதாரமில்லை என வழக்கை ரத்து செய்தார்.
Advertisement