'தயவுசெஞ்சு பகல்ல போட்டோ போடாதிங்க'- மாளவிகாவுக்கு ரசிகர் வேண்டுகோள் - அதுக்கு அவங்க என்ன சொன்னாங்க தெரியுமா?
ரசிகரின் கோரிக்கைக்கு மாளவிகா அளித்துள்ள பதில் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
ரசிகரின் கோரிக்கைக்கு மாளவிகா அளித்துள்ள பதில் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
தமிழில் நடிகர் ரஜினிகாந்த்தின் பேட்ட படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் மாளவிகா மோகனன். தொடர்ந்து நடிகர் விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார். திரையரங்குகளில் வெளியான மாஸ்டர் பெரும் வெற்றிபெற்றது.
தொடர்ந்து தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா நடித்த மாறன் திரைப்படம் ரசிகர்களைக் கவரவில்லை. புதிய படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியானது.
Advertisement
Advertisement
நடிகை மாளவிகா மோகனன் சமூக வலைதளங்களில் அடிக்கடி கவர்ச்சிப் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்துவருகிறார். சமீபத்தில் அவர் பகிர்ந்த புகைப்படங்கள் சமூக வலைதலங்களை கலக்கிவருகின்றன.
இதையும் படிக்க | அருண் விஜய்க்கு வாழ்த்துசொன்ன சிவகார்த்திகேயன்
இந்த நிலையில் ரசிகர் ஒருவர், மக்கள் அதிகம் உள்ள பகல் நேரங்களில் புகைப்படங்களை பதிவிடாதீர்கள். சென்னையின் சாலைகள் பள்ளமாக இருக்கின்றன. நான் ஒரு பெரிய பள்ளத்தில் விழத் தெரிந்தேன் என்று குறிப்பிட்டுள்ளார். அதற்கு பதிலளித்த மாளவிகா நான் இதனை பாராட்டாக எடுத்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.