முகப்பு
செய்திகள்

பொன்னியின் செல்வன் முதல் பாடல் வெளியீட்டு விழா எங்க நடக்கப்போகுது தெரியுமா?

பொன்னியின் செல்வன் முதல் பாடல் வெளியீட்டு விழா நடக்கும் இடம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Updated On : 30 ஜூலை, 2022 at 4:02 PM
பகிர்:

பொன்னியின் செல்வன் முதல் பாடல் வெளியீட்டு விழா நடக்கும் இடம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தின் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் இந்தப் படத்தின் முதல் பாடலான பொன்னி நதி பாடல் நாளை (ஜூலை 31) வெளியாகவிருக்கிறது. 

இளங்கோ கிருஷ்ணன் எழுதியுள்ள இந்தப் பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் பாடியுள்ளார். தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் இந்தப் பாடல் வெளியாகவுள்ளது. 

Advertisement

இந்த நிலையில் இந்தப் பாடலானது சென்னையிலுள்ள எக்ஸ்பிரஸ் அவின்யூ என்ற வணிக வளாகத்தில் வைத்து நாளை மாலை 6 மணிக்கு ரசிகர்கள் முன்னிலையில் வெளியிடப்படவிருக்கிறது. நிகழ்வில் பொன்னியின் செல்வன் நட்சத்திரங்கள் பங்கேற்கவிருக்கின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.