முகப்பு
செய்திகள்

நடிகை தீபிகா படுகோன் நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதி ? என்ன நடந்தது ?

திபீகா படுகோன் திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலியின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் வீடு திரும்பினார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:32 AM
பகிர்:

திபீகா படுகோன் திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலியின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் வீடு திரும்பினார். 

தீபிகா தற்போது பிரபாஸுடன் இணைந்து பிராஜெக்ட் கே என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அமிதாப் பச்சனும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். 

இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்றுவருகிறது. இந்தப் படத்தை நடிகையர் திலகம் படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்குகிறார்.

படப்பிடிப்பில் இருந்தபோது தீபிகாவிற்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. மேலும் அவருக்கு இதய துடிப்பும் அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பிறகு அவர் நலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், மீண்டும் அவர் படப்பிடிப்பில் கலந்துகொண்டார். 

முழு கட்டுரையைப் படிக்க →