டான் திரைப்படத்தால் கண்கலங்கிய நடிகர் ரஜினிகாந்த்
நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்து நடித்துள்ள டான் திரைப்படத்தைப் பார்த்த நடிகர் ரஜினிகாந்த படக்குழுவினரை அழைத்து பாராட்டியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்து நடித்துள்ள டான் திரைப்படத்தைப் பார்த்த நடிகர் ரஜினிகாந்த படக்குழுவினரை அழைத்து பாராட்டியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சிவகார்த்திகேயன் தனது எஸ்கே புரொடக்சன்ஸ் சார்பாக தயாரித்துள்ள டான் திரைப்படத்தை அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தை சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸுடன் இணைந்து லைக்கா நிறுவனமும் தயாரித்துள்ளது. இந்தப்படத்தில் நடிகை பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். இதுதவிர நடிகர்கள் சூரி, எஸ்.ஜே.சூரியா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க | பா. இரஞ்சித் - விக்ரம் படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும்?
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை வெளியான டான் திரைப்படம் விமர்சனரீதியிலும், வசூல்ரீதியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் டான் திரைப்படத்தைப் பார்த்த நடிகர் ரஜினிகாந்த் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் படக்குழுவினரை தொலைபேசியில் அழைத்து பாராட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.
திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாமல் இருந்ததாக நடிகர் ரஜினிகாந்த் குறிப்பிட்டதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.