ராஷ்மிகா- விஜய் தேவர கொண்டா மாலத்தீவுக்கு பயணம்! ரகசிய காதலா?
நடிகர் விஜய் தேவர கொண்டாவும் நடிகை ராஷ்மிகா மந்தனாவும் மாலத்தீவுக்கு ஒரே விமானத்தில் புறப்பட்டது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
நடிகர் விஜய் தேவர கொண்டாவும் நடிகை ராஷ்மிகா மந்தனாவும் மாலத்தீவுக்கு ஒரே விமானத்தில் புறப்பட்டது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகா மந்தனாவும், கீதா கோவிந்தம் படத்தில் இணைந்து முதன் முதலில் நடித்திருந்தனர். இந்தப் படத்தில் இருவரின் ஜோடி அனைவரையும் கவர்ந்தது. படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.
கீதா கோவிந்தம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இந்த ஜோடி ‘டியர் காம்ரேட்’ படத்தில் மீண்டும் ஒன்றாக நடித்தனர். இந்த இரண்டு படங்களுமே வெற்றியடைந்ததற்கு இவர்களது ஸ்கிரின் பிரசன்ஸ்தான் முக்கிய காரணமாக இருந்தது. முதல் படத்திலிருந்தே இவர்கள் இருவரும் காதலிப்பதாக தகவல் வெளியானது. இதை உண்மை என்பது போல ‘டியர் காம்ரேட்’ படத்தில் ஒரு லிப் லாக் காட்சியும் அட்டகாசமாக இடம் பெற்று இருந்தது. ஆனால், நாங்கள் இருவரும் நண்பர்கள் தான், காதலர்கள் இல்லை என்றே இருவரும் கூறி வருகின்றனர்.
Advertisement
Advertisement
இந்நிலையில், தற்போது இருவரும் தனித்தனியாக விமான நிலையத்திற்கு வந்து ஒரே விமானத்தில் மாலத்தீவுக்கு பயணம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் இருவரும் மீண்டும் ரகசியமாக காதலிக்கிறார்களா என்ற சர்ச்சை இணையத்தில் வைரலாகி வருகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.