செய்திகள்

பாக்கியலட்சுமி தொடரிலிருந்து வெளியேறும் கோபி!

பாக்கியலட்சுமி தொடரிலிருந்து கோபி கதாபாத்திரத்தில் நடித்துவந்த சுரேஷ் வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.

DIN

பாக்கியலட்சுமி தொடரிலிருந்து கோபி கதாபாத்திரத்தில் நடித்துவந்த சதீஸ் வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.

சின்னத்திரை தொடர்களில், பாக்கியலட்சுமி தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு காணப்படுகிறது. கடந்த 2020ஆம் ஆண்டு முதல் இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. 

ஸ்டார் ஜல்சா என்ற தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'ஸ்ரீமோயி' என்ற பெங்காலி மொழித் தொடரின் மறு உருவாக்கமாக பாக்கியலட்சுமி தொடர் எடுக்கப்பட்டு வருகிறது. 

இந்த தொடரில் கோபியின் இரண்டாவது மனைவியான ராதிகா என்ற கதாபாத்திரத்தில் ரேஷ்மா நடித்து வருகிறார். ரித்திகா அமிர்தா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சதீஸ் நடிக்கும் கோபி கதாபாத்திரத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது.

இந்த நிலையில், பாக்கியலட்சுமி தொடரிலிருந்து கோபி கதாபாத்திரத்தில் நடித்துவந்த சதீஸ் வெளியேறுவதாக அறிவித்துள்ளார். விஜய் டிவி விருது விழாவில் அவர் கலந்துகொள்ளவில்லை. இதனால் அவருக்கும், சேனல் தரப்புக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டுதாகவும், இதன் காரணமாக தொடரிலிருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது.

சதீஸ் அவருடைய இன்ஸ்டாகிராம் பதிவில், "வாழ்க்கையில் எதிர்பார்ப்புகள் இருக்க கூடாது. நேற்றுவரை நான் பெரிய மேதாவி, புத்திசாலி, உலகத்தையே மாற்றலாம் என நினைத்தேன். நான் என்னையே மாற்றிக்கொண்டேன், இந்த உலகத்தை எல்லாம் மாற்ற முடியாது. என்னை மட்டும் தான் என்னால் மாற்றிக்கொள்ள முடியும்" எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஷியா - அமெரிக்கா ஒப்பந்தம் இன்றுடன் முடிவு! மீண்டும் ஓர் அணு ஆயுதப் போட்டியா?

மறுவெளியீடாகும் மௌனம் பேசியதே!

டபிள்யூபிஎல் இறுதிப் போட்டியில் ஜெமிமா - ஸ்மிருதி..! களத்திலும் தோழிகளாக இருப்பார்களா?

தேமுதிகவில் நாளை முதல் விருப்ப மனு விநியோகம்!

நான் இன்னும் விஜய் மற்றும் தவெகவை அடிக்க ஆரம்பிக்கவில்லை! - Annamalai | TVK Vijay | BJP

SCROLL FOR NEXT