FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

பிக் பாஸ் 7- நிகழ்ச்சியில் தொகுப்பாளர் பாவனா, பாடகி ராஜலட்சுமி?

நடிகை ரேகா நாயர், பைல்வான் ரங்கநாதன், மாகாபா ஆனந்த், இந்திரஜா ஷங்கர் ஆகியோர் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியானது. 

Updated On : 30 ஆகஸ்ட் 2023, 5:35 pm IST
பாடகி ராஜலட்சுமி / தொகுப்பாளர் பாவனா
பகிர்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள பிக் பாஸ் 7வது சீசன் நிகழ்ச்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளர் பாவனா, பாடகி ராஜலட்சுமி கலந்துகொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இடத்தை நிரப்பும் வகையில் பிக் பாஸ் -7 நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளது. 

இந்த நிகழ்ச்சிக்கான முன்னேற்பாட்டு பணிகளில் விஜய் தொலைக்காட்சி தீவிரம் காட்டி வருகிறது. நடிகர் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். 

Advertisement

Advertisement

ஏற்கெனவே ஒளிபரப்பான அனைத்து சீசன்களையும் தொகுத்து வழங்கியவர் கமல்ஹாசன்தான். 

தற்போது பிக்பாஸ் -7 நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவுள்ள போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன.

இதற்கு முன்பு, நடிகை ரேகா நாயர், பைல்வான் ரங்கநாதன், மாகாபா ஆனந்த், இந்திரஜா ஷங்கர் ஆகியோர் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியானது. 

அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சி தொகுப்பாளர் பாவனா, கிராமிய பாடகி ராஜலட்சுமி ஆகியோர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவுள்ளனர்.  விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் பாவனா தொகுத்து வழங்கியுள்ளார். விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக ராஜலட்சுமி கலந்துகொண்டிருந்தார். தற்போது சினிமா பாடல்களை ராஜலட்சுமி பாடிவருகிறார். பாவனாவும் கிரிக்கெட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிவருகிறார். பல்வேறு விருது வழங்கும் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்குகிறார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments