தொடர்ந்து தள்ளிப்போகும் வாடிவாசல் படப்பிடிப்பு!
வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் ஒத்திவைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் ஒத்திவைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் ஜல்லிக்கட்டை மையமாக வைத்து உருவாகும் ‘வாடிவாசல்’ திரைப்படத்திற்காக காளை ஒன்றை வளர்த்து வருகிறார்.
'அண்ணாத்த' படத்திற்கு பின் சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் சூர்யா நடிக்கிறார். 'கங்குவா' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பட்டானி நடிக்கிறார்.
Advertisement
இந்நிலையில், நடிகர் சூர்யா கங்குவா படப்பிடிப்பு பணிகளில் பிஸியாக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், வெற்றி மாறனும் விடுதலை 2 படப்பிடிப்பில் பிஸியாக இருப்பதால் வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து தள்ளிப்போய் கொண்டே உள்ளது.
இதையும் படிக்க: ரெஜினா படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!