இயக்குநர் அட்லி, ஷாருக்கானின் ஜவான் படத்தின் மூலம் ஹிந்தியில் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். அனிருத் இசையமைத்த இப்படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இப்படம் நேற்று உலகம் முழுவதும் 4,500 திரைகளில் வெளியானது. பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரான இதன் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.
இதையும் படிக்க: இயக்குநரும் நடிகருமான மாரிமுத்து மரணம்
இப்படம் உலகளவில் முதல்நாளில் ரூ.150 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் இந்தியாவில் மட்டும் ரூ.70 கோடிக்கும் அதிகமாக வசூலித்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இதனால், இதுவரை வெளியான பாலிவுட் படங்களிலேயே முதல்நாள் வசூலில் இவ்வளவு பெரிய தொகையை வசூலித்த படமாக உருமாறியுள்ளது.
இதையும் படிக்க: தடுமாறுகிறாரா ஜவான்? திரைவிமர்சனம்
ஜவான் திரைப்படம் டிக்கெட் முன்பதிவு வாயிலாகவே ரூ.40 கோடியைக் குவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தெலுங்கு சூப்பர் ஸ்டாரான நடிகர் மகேஷ் பாபு, “ஜவான் பிளாக்பஸ்டர் சினிமா. அட்லி, ராஜாவை வைத்தே ராஜ தரத்திலான எண்டர்டெயின்மெண்ட் படத்தை எடுத்துவிட்டார். அவர் சினிமா வாழ்வின் சிறந்த படம். ஷாருக்கானின் திரை ஆளுமையையும் கவர்ச்சியையும் யாருடனும் ஒப்பிடமுடியாது. ஷாருக்கானின் முந்தைய சாதனைகளை(பதான்) ஜவான் முறியடிக்கும்” என டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.